அடுத்தகட்ட ரசிகர்கள் சந்திப்பு எப்போது? ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Thursday,May 18 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த 15ஆம் தேதியில் இருந்து சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இந்த சந்திப்பு இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. இன்றைய சந்திப்புக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது:

நான் ரசிகர்களை சந்திப்பதும், அவர்கள் என்னை சந்திப்பதும் இருதரப்பினர்களுக்குமே இன்ப அதிர்ச்சியாக உள்ளது. பழைய ரசிகர்கள் போலவே இன்றைய இளையதலைமுறை ரசிகர்களும் துடிப்புடனும் ஆர்வமாகவும் இருந்ததை பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது.

இந்த சந்திப்பு இவ்வளவு சீக்கிரம் முடியப்போகிறது என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெகுவிரைவில் அடுத்தகட்ட, அதாவது மீதியுள்ள 18 மாவட்ட ரசிகர்களுடனான சந்திப்பு குறித்த தேதி அறிவிக்கப்படும் என்பதை உறுதி கூறுகிறேன். நான் ரசிகர்களிடம் எப்போதும் கூறுவதை போல குடும்பத்தையும் உடம்பையும் கவனமாக பார்த்து கொள்ளுங்கள், கெட்ட பழக்கத்தை கைவிடுங்கள் என்பதுதான்'இவ்வாறு ரஜினிகாந்த் தனது பேட்டியில் கூறினார். மேலும் ரஜினி-ரசிகர்களின் சந்திப்பு நாளையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெயலலிதாவுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். பிரபல நடிகை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அதிமுக தலைவர்கள் யாராவது சென்று அஞ்சலி செலுத்தினால் அதிரடி திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது...

ஓட்டுப் போட காசு வாங்குபவர்களுக்கு இப்படித்தான் தலைவன் வருவான். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்...

விவேகம்-தளபதி 61 படங்களின் அபூர்வ ஒற்றுமை

தல அஜித் மற்றும் இளையதளபதி விஜய் ஆகிய இருவரும் கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்கள் என்பது அனைவருமே தெரிந்ததே...

அருண்விஜய்யின் அடுத்த படத்தில் வில்லனாகும் ஸ்டண்ட் இயக்குனர்?

அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'குற்றம் 23' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து அவர் 'தடையற தாக்க' இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சைபர் க்ரைம் குற்றங்களை தோலிரிக்கும் 'இணையதளம்'. திரை முன்னோட்டம்

கடந்த சில நாட்களாகவே ரான்சம்வேர் என்ற வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் வரும் வெள்ளி அன்று சைபர் க்ரைம் குறித்த குற்றங்கள் குறித்து அலசும் திரைப்படமான 'இணையதளம்' வெளியாகவுள்ளது...