நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணையும் ரஜினி-விஜய்?

  • IndiaGlitz, [Saturday,March 25 2017]

இந்தியாவின் மிக பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் தேதியை உலகில் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் நடைபெறவுள்ளது

இந்த இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வருகிறது.

'பாகுபலி 2' இசை விழாவில் ரஜினி, விஜய் கலந்து கொள்வது இன்றுவரை உறுதி செய்யப்படவில்லை எனினும் இருவரையும் விழாவிற்கு அழைக்க 'பாகுபலி 2' குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும், எஸ்.எஸ்.ராஜமெளலி மீது இருவருக்கும் மிகுந்த மரியாதை உள்ளதால் இந்த விழாவில் கலந்து கொள்ள இருவரும் ஒப்புக்கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

டோலிவுட் செல்கிறது 'போகன்'. ஜெயம் ரவி, அரவிந்தசாமி கேரக்டரில் நடிக்க போவது யார்?

ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா நடிப்பில் லட்சுமண் இயக்கிய 'போகன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஜெயம் ரவிக்கு இன்னொரு வெற்றி படமாக அமைந்தது.

ரஜினிகாந்தை தாராளமாக பாராட்டலாம். சுப்பிரமணியன் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆர்.கே.நகர் தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கம்' ஆதரவு யாருக்கு? எஸ்.ஏ.சி பேட்டி

இளையதளபதி விஜய்யின் 'விஜய் மக்கள் இயக்கம்' அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருவதால், இந்த இயக்கம் ஒவ்வொரு தேர்தலின்போதும் யாருக்கு ஆதரவு என்கிற நிலையை எடுத்து வருகின்றது

ரஜினிகாந்த் இலங்கை செல்ல முக்கிய அரசியல் கட்சி தலைவர் எதிர்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக கட்டியிருக்கும் 150 வீடுகளை திறந்து வைக்க ரஜினிகாந்த் சம்மதித்துள்ளதாக வெளிவந்த செய்தியினை பார்த்தோம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சரத்குமார் கட்சி மனு தள்ளுபடி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ், தீபா மற்றும் சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர்