இவர்கள் இருவரும் இணைந்தால் 'அவதார்' சாதனையை முறியடிக்கலாம். அல்போன்ஸ்புத்ரன்

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் பெரும் வசூலை குவித்தது. முதல் பாகம் சுமார் ரூ.600 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது பாகமும் வெளியான 4 நாட்களிலேயே ரூ.300 கோடியை நெருங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தென்னிந்தியாவை பொருத்தவரைய்யில் ரஜினி படத்தை நெருங்கும் சாதனையை 'பாகுபலி' படம் நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் தென்னிந்தியாவின் இரண்டு மிகபெரிய வசூல் சக்கரவர்த்திகள் ஒரு படத்தில் இணைந்தால் அந்த படத்தின் வசூல் எப்படி இருக்கும்? என்று கூறுகிறார் பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். ரஜினிகாந்த், ராஜமெளலி இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்தால் அந்த படத்தின் வசூல் உலக அளவில் முதல் இடத்தில் உள்ள ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' படத்தின் சாதனை பின்னுக்கு தள்ளப்படும் என்று நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே 'பாகுபலி' விழா ஒன்றில் ராஜமெளலி கூறியபோது, 'தமிழில் நேரடியாக ஒரு படம் இயக்கினால், அது ரஜினிகாந்த் படமாகத்தான் இருக்கும் என்றும் அவருடன் பணிபுரிய வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை' என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் சரித்திர வசூல் சாதனை செய்யும் படம் என்று எதிர்பார்க்கப்படும் ரஜினி-ராஜமெளலி படம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தினகரன் பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தாரா சுகேஷ் சந்திரா?

அதிமுகவின் இரட்டை இலை சின்னதை குறுக்கு வழியில் பெற தேர்தல் கமிஷனுக்கு சுகேஷ் சந்திரா என்ற தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் டெல்லி போலீசார் மிக தீவிரமாக தொடர்ந்து விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்...

நாம் செய்ய தவறியதை பைரஸியினர் சரியாக செய்கின்றனர். எஸ்.எஸ்.ராஜமெளலி

இன்று உலகம் முழுவதிலும் உள்ள திரையுலகினர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை பைரஸி. குறிப்பாக் கோலிவுட்டில் இந்த பிரச்சனை தலைவிரித்து ஆடி வருகிறது. படம் ரிலீஸ் தினத்தில் ஃபேஸ்புக்கில் லைவ் செய்வது, ரிலீஸ் தினத்தன்றே திருட்டுவிசிடி, இணையதளத்திலும் ரிலீஸ் ஆவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதை ஒழிக்க நடிகர் சங்கமும், தயாரி

சென்னையை அதிர வைத்த 'பாகுபலி 2' வசூல்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பாக்ஸ் ஆபிசில் சுனாமியை ஏற்படுத்திவிட்டது.

கடவுளே வாழ்த்தியது போல உணர்கிறேன். சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கு ராஜமெளலி பதில்

இந்திய சினிமாவை உலக அளவில் தலைநிமிர்த்திய ஒரு படம் என்று எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களை கூறினால் அது மிகையில்லை. உண்மையான பிரமாண்டம்...

பிரமாண்ட இயக்குனரை பாராட்டிய பிரமாண்ட இயக்குனர்

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் தென்னிந்தியாவின் எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் ஷங்கர்  ஆகிய இருவரும் மிகவும் முக்கியமானவர்கள். இவர்களுடைய படங்கள் வெளிவரும்போது அந்த படத்தின் நாயகர்களை விட இவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்...