சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முடிவில் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Saturday,April 08 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் தனது ரசிகர்களை வரும் 11 முதல் 16ம் தேதி வரை சந்தித்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க திட்டமிட்டிருந்தார். இந்த தகவலை அவரே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்தபோது பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது
ஏப்ரல் 12 முதல் 16 வரையிலான இந்த குறுகிய காலகட்டத்தில் ஒவ்வொரு ரசிகர்களுடனும் தனித்தனியாக புகைப்படம் எடுப்பது என்பது சாத்தியமில்லை என்று கருதப்படுவதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாக ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் மிக விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க திட்டம் இருப்பதாகவும், தன்னுடைய நிலையை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளது

More News

பிரபல நடிகையை காரில் கடத்திய மர்ம கும்பல்.

பிரபல நடிகை பாவனா மர்ம நபர்களால் சமீபத்தில் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகையும் மாடல் அழகியுமான அர்ச்சனாவை ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா அணி மகளிரணியினரின் நிர்வாண மிரட்டல். அநாகரீக அரசியலின் உச்சக்கட்டம்

ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோர்கள் நடத்திய நாகரீக அரசியல் இன்று அநாகரீகத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளது.

ஒரு ரூபாய் அறிவிப்பு செய்ய விஷாலுக்கு என்ன உரிமை இருக்கிறது? திரையரங்கு உரிமையாளர் சங்கம் கண்டனம்

சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்று பொறுப்பேற்ற நடிகர் விஷால், 'தமிழக திரையரங்கில் ரசிகர்கள் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு ரூபாய் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையா

டாம் குரூஸ் அடுத்த படத்தில் பிரியங்கா சோப்ரா?

இந்திய நடிகைகள் குறிப்பாக பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் முன்னணி நடிகர்களுடன் இணணந்து நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான வின் டீசல் நடித்த 'XXX எக்ஸேண்டர் கேஜ்' படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே நடித்திருந்தார். அதேபோல் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 'பே வாட்ச்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்...

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2': டிராக்லிஸ்ட் வெளியீடு

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. கீரவானி இசையில் இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன...