ரஜினி ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகி அதிரடி நீக்கம்.

  • IndiaGlitz, [Tuesday,May 30 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பேச்சு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றின் மூலம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அதன்படி ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, தலைமை மன்ற நிர்வாகி திரு வி.,எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி வி.எம்.சுதாகர் அவர்கள் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஒருவரை இன்று நீக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவது யாதெனில் நமது மன்றகட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சைதை G.ரவியை மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், தகுதியிலிருந்தும் நீக்குகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இனி வரும் காலங்களில் அவருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, மற்றவர்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் இதையும் மீறி யாராவது அவருடன் தொடர்பு கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொண்டு, மற்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும் மன்ற தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பத்திரிகை தொலைக்காட்சி பேட்டி மற்றும் பொது விவாதம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தவிர்த்து, ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ரஜினி அவர்கள் ரசிகர்கள் சந்திப்பின்போது, 'நான் அரசியலுக்கு வரும்போது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பவர்களை தவிர்த்துவிடுவேன்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சங்கமித்ராவில் இருந்து திடீரென விலகிய ஸ்ருதிஹாசன்! காரணம் இதுதான்

'பாகுபலி 2' படத்தை அடுத்து தென்னிந்திய திரையுலகில் தயாராகும் இன்னொரு பிரமாண்டமான சரித்திர திரைப்படமான 'சங்கமித்ரா' திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் நடந்த கேன்ஸ் விழாவில் அறிவிக்கப்பட்டது...

சென்னையில் மாடல் அழகி திடீர் மாயம்.

டெல்லியை சேர்ந்த கானம் நாயர் என்ற மாடல் அழகி மற்றும் மார்க்கெட்டிங் மேனேஜர் சென்னையில் பணிநிமித்தம் கடந்த சில வருடங்களாக வாழ்ந்து வருகிறார்

சிபிஐ நயன், 6 கொலைகள், விஜய்சேதுபதி: இமாலய எதிர்பார்ப்பில் இமைக்கா நொடிகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தின் தகவல்கள் ஒவ்வொன்றும் அந்த படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தி கொண்டே வருகின்றது.

'விவேகம்' படத்தில் விவேக் ஓபராய் ஏற்படுத்திய ஆச்சர்யம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தில் அஜித், சிக்ஸ்பேக், ரிஸ்கான, டூப் இல்லாத சண்டைக்காட்சிகள் ஆகியவற்றுக்காக மிகுந்த சிரத்தை எடுத்துள்ளதாக அவ்வப்போது வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.

ரஜினி பட நடிகருக்கு மாவோயிஸ்ட்கள் அமைப்பு எச்சரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் '2.0'.