அரசியலுக்கு முன் சர்வே எடுத்தாரா ரஜினிகாந்த்?

  • IndiaGlitz, [Friday,June 23 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது ஒருசில அரசியல் குறித்த கருத்துக்களை பேசினார். இந்த பேச்சில் இருந்து அவர் அரசியலுக்கு விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து வருவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இந்த முறை ரஜினியின் பேச்சில் உறுதி தென்பட்டதால் ஒருசில கட்சித்தலைவர் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னர் தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை என்ன? தான் அரசியலுக்கு வந்தால் எந்தமாதிரியான ரிசல்ட் கிடைக்கும், அரசியலுக்கு வருவதற்கு இது தகுந்த சூழ்நிலை தானா என்று பெங்களூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் சர்வே எடுக்க ஒப்படைத்திருந்தார் என்று கூறப்படுகிறது
மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள், மற்றும் சில பத்திரிகையாளர்கள் இந்த சர்வேயை எடுத்ததாகவும், இதன்முடிவு ரஜினி அரசியலுக்கு வருவதற்கு இது சாதகமான சூழல்தான் என்று வெளிவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த சர்வேயை அடிப்படையாக வைத்து ரஜினி தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என்றும், அனேகமாக வரும் செப்டம்பரில் ரஜினியின் அரசியல் கட்சி பெயர் மற்றும் கொடி அறிவிக்கப்படும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

டிரம்ப்பை கொலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஜானி டெப்

சமீபத்தில் உலகம் முழுவதும் வெளிவந்து சக்கை போடு போட்ட ஹாலிவுட் படம் 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்'.

செளந்தர்யா ரஜினி-அஸ்வின் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்த்ர்யா ரஜினி-அஸ்வின் தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய கடந்த ஆண்டு முடிவு செய்தனர்.

விவாகரத்து வழக்கு: செளந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்வது குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியாகும் 'சமையல் மந்திர' நடிகை

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சமையல் மந்திரம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யாவை தெரியாத இளைஞர்கள் இருக்க முடியாது.

விஜய்க்கு 'மெர்சல்' படம் ஒரு வைரமகுடம். ஹேமாருக்மணி

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டு லுக்குகள் வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்ட நிலையில் இந்த படம் குறித்தும், விஜய் குறித்தும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்