ரஜினிக்கு முதல்வராகும் தகுதி இல்லை: சுப்பிரமணியம் சுவாமி

  • IndiaGlitz, [Friday,May 19 2017]

கடந்த ஒருவாரமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற பேச்சே அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் டிரெண்ட் ஆகி வருகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியலில் எளிதாக ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் ஒருசில கட்சி தலைவர்களுக்கு ரஜினியின் அரசியல் அறிவிப்பு இடியாய் இறங்கியுள்ளது. எனவே அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றும், விருப்பம் இருந்தால் வரட்டும் என்றும், ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும் என்றும், பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ரசிகர்களிடையே உரையாடிய ரஜினிகாந்த் போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் என்றும், எதிர்ப்புகள் தான் நமது வளர்ச்சியின் உரம் என்றும் பரபரப்புடன் பேசினார். ரஜினியின் இன்றைய பேச்சு தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில் ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அவர் அரசியலுக்கு வருவது குறித்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ரஜினி ஒரு ஊழல் நடிகர் . அவர் அரசியலுக்கு வரக்கூடாது. ரஜினிக்கு அரசியல் பற்றிய அறிவு கிடையாது. முதல்வராக தகுதி அவருக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி தமிழர் இல்லை என நான் ஒருபோதும் கூறியதில்லை என்றும், அவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் என்று திமுகதான் பிரச்சினை கிளப்பியது என்றும் கூறியுள்ளார்.

More News

சச்சின் திரைப்படத்தை உற்சாக்ப்படுத்தும் இந்திய மாநிலங்கள். தமிழகமும் சேருமா?

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் எ பில்லியன் டிரீம்ஸ்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி தமிழ், உள்பட பல மொழிகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெளியாகவுள்ளது...

பாடல் வெளியீட்டுக்கு பதில் ஆக்சன் வெளியீட்டு விழா: மிஷ்கினின் வித்தியாசமான முயற்சி

விஷால் நடிப்பில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் தெரிவிக்கையில் ஹாலிவுட்டில் வெளிவரும் ஷெர்லாக்

போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். ரஜினிகாந்த்

இன்று  ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், ரசிகர்களிடையே பேசியதாவது...

நான் பச்சை தமிழன். என்னை தூக்கி போட்டால் இமயமலையில் தான் விழுவேன்! ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் இன்று நான்காவது நாளாக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்கின்றார்...

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்...