நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Friday,March 31 2017]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கோலிவுட் திரையுலகமே கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து வருகிறது.
இந்த நிலையில் சரியாக 11.30 மணியளவில் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொண்டார். நடிகர் சங்கத்திற்கு ஒரு செங்கல்லை கையுடன் கொண்டு வந்த கமல், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் நடிகர்களுக்குப் பெரிய கோட்டையாக அமையும் என நம்புவதாக' கூறினார்.
அதேபோல் மலேசிய பிரதமருடனான சந்திப்புக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று முன்னர் நடிகர் சங்க கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா வெற்றிகரமாக நடந்துள்ளது; இனி எல்லாம் வெற்றிதான்' என்று கூறினார்.

More News

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்

ஐந்து நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மலேசிய பிரதம்பர் நஜீப் ரசாக் இன்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்

நானும் கார்த்தியும் ரூ.10 கோடி நிதியளிப்போம். அடிக்கல் நாட்டு விழாவில் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா இன்று தொடங்கியது.

தயாரிப்பாளராக மாறினார் எமிஜாக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' திரைப்படத்தின் நாயகி எமிஜாக்சன் தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் தயாரிக்கவிருப்பது திரைப்படம் அல்ல என்பதும், அது ஒரு குறும்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது...

நகைக்கடைக்காரர் மகளுடன் அனிருத் திருமணம் உண்மையா?

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் இளம் இசைப்புயல் அனிருத் திருமணம் குறித்த செய்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. அனிருத் நகைக்கடை உரிமையாளர் ஒருவரது மகளை திருமணம் செய்யவிருப்பதாகவும்,  வரதட்சணையாக நவீன ரிகார்டிங் ஸ்டுடியோ ஒன்றை அவர் அனிருத்துக்கு கொடுக்கவிருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன...

விஜய்சேதுபதியின் 'கவண்' படத்திற்கு கிடைத்த கூடுதல் போனஸ்

விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இன்றைய ஓப்பனிங் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...