close
Choose your channels

'நாங்க மதுரையில் இருந்து வந்திருக்கோம்': ராஜஸ்தானில் ரஜினியை சுற்றி வளைத்த ரசிகர்கள்!

Monday, February 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தின் காரை சுற்றி வளைத்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படம் ஒரு உண்மையான பான் -இந்தியா திரைப்படம் என்ற வகையில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாளத்தில் மோகன் லால், கன்னடத்தில் சிவராஜ்குமார், தெலுங்கில் சுனில் மற்றும் பாலிவுட்டில் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ’ஜெயிலர்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மார் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்துக்கு ரஜினிகாந்தின் கார் வந்தபோது அந்த காரை ரசிகர்கள் சுற்றி வளைத்து அவருடன் செல்பி எடுக்க முயற்சித்தனர். அதில் ரசிகர்களில் ஒருவர் நாங்கள் மதுரையிலிருந்து வந்திருக்கிறோம் என்று கூறியபோது கார் கண்ணாடியை லேசாக இறக்கிய ரஜினிகாந்த் அவருக்கு கைகாட்டி தனது வாழ்த்தை தெரிவித்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.