தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கடிதம்

  • IndiaGlitz, [Friday,April 07 2017]

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் 'நம்ம அணி[' கிட்டத்தட்ட அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் புதிய நிர்வாகிகளின் பதிவேற்பு விழா நேற்று மாலை சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவை ரோகிணி தொகுத்து வழங்கினார்

இந்த விழாவில் பதவியேற்று கொண்ட புதிய நிர்வாகிகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து கூறி தனது உதவியாளர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:


"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு.விஷால் அவர்களுக்கும், துணைத்தலைவர்கள் திரு பிரகாஷ்ராஜ், திரு கவுதம் மேனன் அவர்களுக்கும், கெளரவ செயலாளர்கள் திரு ஞானவேல்ராஜா, திரு.கதிரேசன் அவர்களுக்கும் பொருளாளர் திரு,எஸ்.ஆர்.பிரபு அவர்களுக்கும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொண்டு தயாரிப்பாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய அந்த கடவுள் உங்களோடு துணையிருக்க வேண்டுமென்று வேண்டி வாழ்த்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

தனுஷின் முதல் முயற்சிக்கு கிடைத்த முக்கிய வெற்றி

கோலிவுட் திரையுலகில் இளம் வயதிலேயே நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என முக்கிய துறைகளில் ஜொலித்து வந்த தனுஷ் தற்போது இயக்குனர் துறையிலும் கால்பதித்துள்ளார். அவர் இயக்கிய முதல் படம் 'பவர்பாண்டி' வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது...

பாகுபலி'க்கு பின் மீண்டும் ஒரு சரித்திர படத்தில் சத்யராஜ்-ராணா

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்த சத்யராஜ் மற்றும் ராணா மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளனர்...

'நந்தா' சூர்யா கேரக்டரில் நடிக்கும் பிரபல தயாரிப்பாளர்

பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தருமான ஆர்.கே.சுரேஷ், தேசிய விருது பெற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் நடிகரானார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ஆர்.கே.சுரேஷின் நடிப்பிற்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது...

ஆர்யாவின் 'கடம்பன்' சென்சார் தகவல்கள்

நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த படங்கள் திருப்தியான வெற்றியை பெறாத நிலையில் அவர் மலைபோல் நம்பியிருக்கும் ஒரே படம் 'கடம்பன்'. இந்த படத்திற்காக ஆர்யா தனது அதிகபட்ச உழைப்பை கொட்டியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது...

பாமகவின் முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்த கமல்ஹாசன்

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்தது. இந்த தீர்ப்பால் நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.