இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ஒருசிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார்.

இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இலங்கை வாழ் தமிழர்களும் ரஜினியின் இலங்கை பயண ரத்துக்கு வருத்தம் தெரிவித்தனர். ரஜினியை இலங்கைக்கு வரவிடாமல் தடுத்த அரசியல்வாதிகளை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக யாழ் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டி போராட்டமும் நடைபெற்றதாக தகவல்கள் வந்தது

இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தன் மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை ரஜினிகாந்த் நெற்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 'நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும்போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.

இந்த கடிதத்தில் நேரம் கூடி வரும்போது சந்திப்போம் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளதால் மிகவிரைவில் அவர் இலங்கை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்சேதுபதி-கே.வி.ஆனந்த் இணைந்த 'கவண்'. திரை முன்னோட்டம்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் அவர்களும், வருடத்தில் மிக அதிக படங்களை ரிலீஸ் செய்யும் முன்னனி நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதியும் முதல்முறையாக இணைந்த 'கவண்' திரைப்படம் வரும் வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீஸ் ஆகவுள்ளது

பவன் கல்யாண் அடுத்த படத்தில் குவியும் கோலிவுட் நட்சத்திரங்கள்

பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்த 'கட்டமராயுடு' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வசூலை பெற்றது.

ரஜினியை தடுத்தது ஏன்? திருமாவளவன் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை சென்று லைகா நிறுவனத்தின் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சனை குறித்தும் பேசவிருந்த நிலையில் அவரது பயணத்தை தமிழக அரசியல் தலைவர்கள் சிலபல காரணங்களை கூறி தடுத்துவிட்டனர்.

மீண்டும் ஒரு மெரீனா போராட்டமா? போலீசார் குவிப்பால் பதட்டம்

கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் சென்னை மெரீனா என்றாலே அது ஒரு சுற்றுலா பகுதி என்பதே மறந்து, மாணவர்களின் ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'டோரா' ரன்னிங் டைம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்தும் உள்ள வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.