நடிகரை சுத்தியலால் அடித்து கொலை செய்த நடிகை: சென்னையில் விபரீதமான கள்ளக்காதல்: 

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

கள்ளக்காதல் விபரீதம் ஆனதால் துணை நடிகர் ஒருவரை துணை நடிகை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த தேவி என்ற 42 வயது துணை நடிகைக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கும் ரவி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. ரவி ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குழந்தைகள் பெரியவர்களாகிவிட்டதால் கள்ளக்காதலை முடித்து கொள்ள தேவி முடிவு செய்தார். ஆனால் ரவி அவரை தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு மாற்றி கொண்ட தேவி, செல்போன் எண்ணையும் மாற்றிக்கொண்டார். இதனால் தேவியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் ரவொ தவித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து தேவியின் தங்கையை லட்சுமி என்பவரை கண்டுபிடித்த ரவி, அவரிடம் தேவி எங்கே இருக்கிறார் என கேட்டு தொல்லை கொடுத்திருக்கிறார். தனக்காக தனது தங்கையை தொல்லை படுத்துவதை அறிந்த தேவி, லட்சுமியின் வீட்டிற்கு வந்து ரவியிடம் இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவி, தேவியை தகாத வார்த்தைகளால் பேச இருவரும் வாக்குவாதம் செய்தனர்.

இந்த நிலையில் தேவி மற்றும் தேவியின் கணவர், லட்சுமி மற்றும் லட்சுமியின் கணவர் ஆகிய நால்வரும் சேர்ந்து ரவியை சரமாரியாக அடித்து உதைத்ததோடு அவருடைய தலையில் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து ரவியை கொலை செய்த நால்வரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது

தேவதாசி விவகாரம்: தாயாருக்காக மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி

சமீபத்தில் பாடகி சின்மயியின் தாயார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது தேவதாசி முறையை தான் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.

இசைஞானிக்கு இணையான இசைக்கலைஞன் இல்லை: பாரதிராஜா புகழாராம்

இளையராஜாவும் பாரதிராஜாவும் கடந்த சில ஆண்டுகளாக கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்தாலும் சமீபத்தில் அவர்கள் சமாதானம் ஆகிவிட்டது போல் தெரிகிறது.

ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை பைக்கில் அழைத்துச் சென்றவருக்கு அபராதம் ரூ.6300..!

உத்திரபிரதேசத்தில் ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை பைக்கில் அழைத்துச் சென்றவருக்கு அபராதம் ரூ.6300.

குடிபோதையில் தயாரிப்பாளரை தாக்கிய பிரபல தமிழ் நடிகை: பெரும் பரபரப்பு

கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்துவரும் சஞ்சனா கல்ராணி தற்போது தமிழில் அருண்விஜய்யுடன் 'பாக்சர்' என்ற படத்திலும் விஜய் டிவி ராமர் நடிக்கும் 'போடா முண்டம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.