கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதிகளை எந்த கட்சியும் பெறவில்லை. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாஜக 13 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. இருப்பினும் சிறு கட்சிகளின் ஆதரவுகள் தங்களுக்கு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியது. பாஜக முதல்வர் வேட்பாளராக மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டார். அவரை கவர்னர் ஆட்சி அமைக்குமாரு அழைப்புவிடுத்தார்.

இந்நிலையில் கோவாவில் பா.ஜ.க ஆட்சியமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்த போது, அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ள காங்கிரஸ் கட்சி ஏன் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை என்று கேள்வி எழுப்பியதும்.

மேலும் கோவா முதலமைச்சராக பதவியேற்க மனோகர் பாரிக்கருக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்ததோடு கோவா சட்டமன்றத்தில் வரும் 16ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

More News

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கெளதமியா?

பிரபல நடிகை கெளதமி, நடிப்பில் மட்டுமின்றி சமூகசேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பதும் மனதில் தோன்றிய கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துபவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இன்று பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து முதன்முதலாக தைரிய

ஒருபக்கம் விபூதி, இன்னொரு பக்கம் குங்குமம். தமிழக அரசியலில் ஆன்மீகம்

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனியாக பேரவை ஒன்றை ஆரம்பித்து அரசியலில் சமீபத்தில் நுழைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே

நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணிடம் சில்மிஷம். பிரபல தயாரிப்பாளர் கைது

நடிகர், நடிகைகளின் ஆடம்பரமான வெளிப்புற பகட்டை நம்பி திரையுலகில் நாமும் சாதிக்கலாம் என்று நாள்தோறும் புதிய முகங்கள் திரையுலகில் நுழைய முயற்சித்து வருகின்றனர்.

சரியான நேரத்தில் ஆரம்பமாகும் 'போஸ்டல் வங்கி'

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு பிரச்சனை ஏற்பட்டபோது வங்கி வாடிக்கையாளர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. நம்முடைய கணக்கில் இருந்த பணத்தை எடுக்க பல கண்டிஷன்கள்.

ஆரம்ப விலை ரூ.50 கோடி. அஜித் படத்தின் அமோக வியாபாரம்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவிருப்பதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தையையும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது