close
Choose your channels

பிரியா வாரியர் மனுவுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு

Tuesday, February 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள நடிகை பிரியாவாரியர் ஒரே ஒரு கண்சிமிட்டலின் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலமானார். கூகுள் தேடலில் முன்னணி நடிகைகளான சன்னிலியோனை முந்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

முதல் படம் வெளியாகும் முன்பே இந்திய அளவில் பிரபலமானாலும், அவர் நடித்த படம் ஒன்றின் பாடலில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. ஒரு குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் வகையில் அவர் நடித்து வரும் 'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் இருப்பதாக ஐதராபாத், மும்பை காவல்நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தன்மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியாவாரியர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை அவர் அவசர வழக்காக விசாரணை நடத்தும்படியும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் சற்றுமுன் இந்த மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட், பிரியாவாரியர் மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டு, இந்த வழக்கு நாளை விசாரணை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. பிரியாவாரியர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுமா? என்பது நாளைய விசாரணையில் தெரிந்துவிடும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.