close
Choose your channels

ஷங்கர் - ராம்சரண் படத்தில் வில்லனாக நடிப்பது பாராளுமன்ற எம்பியா?

Tuesday, October 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார் என்பதும் மேலும் ஒரு சில முக்கிய கேரக்டர்களில் அஞ்சலி, சுனில் உள்பட ஒருசிலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. ஷங்கர்- ராம்சரண் படத்தின் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகரும் பாராளுமன்ற எம்பியுமான சுரேஷ்கோபி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ’அன்னியன்’ என்ற திரைப்படத்தில் சுரேஷ்கோபி வில்லனாக நடித்திருக்கிறார் என்ற நிலையில் தற்போது மீண்டும் அவரது படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ்கோபி இந்த படத்தில் இணைந்தால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.