close
Choose your channels

'மாநாடு' படத்தின் 3 நாட்கள் வசூல்: சுரேஷ் காமாட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Sunday, November 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே படக்குழுவினர் அனைவருக்கும் தனித்தனியாக தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூபாய் 8 கோடியும் இரண்டாவது நாளில் ரூபாய் ஆறு கோடியும் வசூல் செய்தது என்பதும் இரண்டு நாள் வசூல் ரூபாய் 14 கோடி என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’மாநாடு’ திரைபடத்தின் 3 நாள் வசூல் 22 கோடி ரூபாய் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இதனை அடுத்து இரண்டாம் நாளை விட மூன்றாம் நாள் அதிகமாக வசூல் அதிகரித்துள்ளது என்பதும் அடாது மழையிலும் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ’மாநாடு’ திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதே ரீதியில் சென்றால் ’மாநாடு’ திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.