close
Choose your channels

'மாநாடு' ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு: அதிர்ச்சியில் சிம்பு ரசிகர்கள்!

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று திடீரென ’மாநாடு’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாக இருந்தது. ஆனால் திடீரென நவம்பர் 25ஆம் தேதி ’மாநாடு’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படத்திற்காக அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவுகள் தொடங்கியது என்பதும் விறுவிறுப்பாக முன்பதிவுகள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் ’மாநாடு’ வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.