close
Choose your channels

'மாநாடு' படத்தின் முதல் விமர்சனம்: மீண்டும் ஒரு 'மங்காத்தா' என பாராட்டு!

Sunday, May 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் இயக்குனர் வெங்கட் பிரபுவை புகழ்ந்துள்ளார்

அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நானும் சிம்புவும் ’மாநாடு’ படத்தை பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்தோம். வெங்கட்பிரபு அவர்களின் கடின உழைப்பு இந்த படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிவதை பார்த்தோம். ‘மங்காத்தா’ இயக்குனர் மீண்டும் ஆக்ஷன் மற்றும் த்ரில் மாஸ் எண்டர்டெய்னர் படத்தை கொடுத்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

அதே போல் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா அவர்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் தனது நடிப்பால் நமது ஒவ்வொருவரின் இதயத்தையும் வெல்வார். ஒய்.ஜி. மகேந்திரன் உள்பட அனைவரும் இந்த படத்தில் சிறப்பாக நடித்து உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்

சிம்பு மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகிய இருவரும் ’மாநாடு’ படத்தை பார்த்து மிகவும் திருப்தியாக இருப்பதாகவும் கண்டிப்பாக இந்த படம் சூப்பர் ஹிட்டாகும் என்று நம்பிக்கையுடன் கூறியதை பார்க்கும்போது இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.