விராத் கோஹ்லி - சுரேஷ் ரெய்னா: முதல் ஐந்தாயிரம் யாருக்கு?

ஐபிஎல் திருவிழா இன்று முதல் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் இன்றைய முதல் போட்டி தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விராத் கோஹ்லியின் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியில் விராத் கோஹ்லிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் ஒரு சாதனை காத்திருக்கின்றது. இந்த சாதனையை யார் முதல் ஏற்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அதாவது இன்றைய போட்டியில் சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை எட்ட இன்னும் 15 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதேபோல் பெங்களூரு கேப்டன் விராத் கோலி ஐந்தாயிரம் ரன்களை எட்ட இன்னும் 52 ரன்கள் தேவைப்படுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யும் அணி சென்னையாக இருந்தால் சுரேஷ் ரெய்னாவும், பெங்களூர் அணியாக இருந்தால் விராத் கோஹ்லியும் இந்த சாதனையை முதலில் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோல் இருவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இருவருமே இந்த சாதனையை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய முதல் போட்டியிலேயே இருவரும் ஐந்தாயிரம் என்ற சாதனையை எட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! சிவகங்கை மட்டும் சஸ்பென்ஸ் ஏன்?

அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்திற்கும் கிளம்பிவிட்ட நிலையில்

சூர்யாவின் 'என்.ஜி.கே' முக்கிய அப்டேட்!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' திரைப்படம் கடந்த ஆண்டே வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் இந்த படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி கொண்டே வருகிறது.

ஜெயலலிதா கேரக்டருக்கு தேசிய விருது பெற்ற நடிகை!

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்திற்கு 'தலைவி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

பிரபல அரசியல் கட்சியில் இணைந்த டான்ஸ் மாஸ்டர் கலா!

கடந்த சில நாட்களாக கோலிவுட் நட்சத்திரங்கள் பலர் அரசியல் கட்சியில் இணைந்து வருவதை பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம்.

தொடர்ந்து 45 நாட்கள் பப்ஜி விளையாடிய மாணவர் பரிதாப பலி!

பப்ஜி என்ற ஆன்லைன் கம்ப்யூட்டர் விளையாட்டு,  மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமைப்படுத்துவதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை