ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன சுரேஷ் தாத்தா: ஆரி ரசிகர்களின் வேண்டுகோள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக எவிக்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருக்கும் நிலையில் சுரேஷ் தாத்தா மற்றும் அனிதா மட்டும் ஏன் வரவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர்.

இதற்கு சேனல் நிர்வாகம் தன்னை அழைக்கவில்லை என்றும் அதனால்தான் தான் வரவில்லை என்றும் வருத்தத்துடன் சுரேஷ் சக்ரவர்த்தி தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த நிலையில் சேனல் நிர்வாகத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டதை அடுத்து சற்று முன்னர் சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் உங்கள் குரல்கள் சேனல் நிர்வாகத்திற்கு கேட்டிருக்கிறது போல, அதனால் தற்போது எனக்கு அழைப்பு வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

சுரேஷ் தெரிவித்த இந்த நல்ல செய்தியை அடுத்து நாளை அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆரிக்கு வாழ்த்து சொல்லுங்கள் என்றும் மனதளவில் தளர்ந்து இருக்கும் ஆரிக்கு ஆறுதல் கூறுங்கள் என்றும், பொய்யாக இன்னும் நடித்து வருபவர்களின் முகத்திரையை கிழியுங்கள் என்றும் ஆரியின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

More News

விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்

பசுமாடு வேலி தாண்டியதால்… காலை துண்டாக வெட்டியக் கொடூரச் சம்பவம்!!!

மழைப் பருவம் என்பதால் தற்போது தஞ்சை பகுதியில் பயிர் சாகுபடி சூடுபிடித்து இருக்கிறது.

கொரில்லாவிற்கும் கொரோனா பாதிப்பு… தொடரும் பட்டியல்!!!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இன்று வரை 9 கோடியே 14 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

10 மாநிலங்களுக்குப் பரவிவிட்ட பறவைக் காய்ச்சல்… பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!!!

கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியில் உறுதிச் செய்யப்பட்ட H5N8 பறவைக் காய்ச்சல் தற்போது 10 மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதான் விராத் கோஹ்லி குழந்தையின் புகைப்படமா? சகோதரர் விளக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதும்