close
Choose your channels

சூர்யா-35 படத்தில் இணைந்த பிரபல நடிகை

Wednesday, September 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்து வரும் 'S 3' படத்தை அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பமாகி தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் ஒப்பந்தமாகி வருகின்றனர்.
சூர்யாவின் 35வது படமான இந்த படத்தில் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்க கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகை சுரபி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே விஐபி, இவன் வேற மாதிரி உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் மற்றும் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.