என் திருமணம் நடக்க காரணமே சூர்யா குடும்பம்தான்: பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,April 04 2018]

சூர்யா நடித்த 'அயன்' உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவருமான ஜெகன், தனது திருமணம் நடக்க காரணமே சூர்யாவின் குடும்பம் தான் என நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் ஜெகன், வான்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. வான்மதியை காதலித்தபோது வான்மதியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தங்களது திருமணத்தை சூர்யா நடத்தி வைக்குமாறு கேட்டுகொண்டதாகவும் ஜெகன் கூறியுள்ளார்.

ஜெகனின் காதல் செய்தியை கேட்ட சூர்யா, நிச்சயம் திருமணத்திற்கு நான் வருவேன், ஆனால் பெற்றோர் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடக்கக்கூடாது என்று சூர்யா கூறினார். பின்னர் நேராக சிவகுமாரிடம் சென்றபோது, நான் இருக்கும்போது நீ ஏன் கவலைப்படுகிறாய்? உன் திருமணம் குறித்து நான் பேசுகிறேன்' என்று கூறி வான்மதியின் பெற்றோரிடம் பேசி எங்கள் திருமணத்திற்கு சம்மதம் பெற்று தந்தார். 

சூர்யாவும், அவருடைய தந்தை சிவகுமார் அவர்களும் தான் எங்கள் திருமணம் நடக்க முழு காரணம் என்று ஜெகன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

More News

சமந்தாவின் 'ரங்கஸ்தலம்' படம் திடீர் நிறுத்தம்: காரணம் என்ன தெரியுமா?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு தடையா?

11வது ஐபிஎல் போட்டிகள் வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னையில் முதல் போட்டி வரும் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது.

பிரபாகரனுடன் சீமான் போட்டோ எடுக்கவே இல்லை, எல்லாம் கிராபிக்ஸ்: வைகோ அதிர்ச்சி தகவல்

கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதில் சுட்டுக்கொல்லப்பட்ட மாயக்காள் உள்ளிட்ட 16 பேரின் 98ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் அனுசரிக்கப்பட்டது

எல்லா புகழும் சூர்யாவுக்கே: பிரபல இயக்குனரின் டுவீட்

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

நோ பாலில் விக்கெட் எடுத்து கொண்டாடுபவர்: அப்ரிடிக்கு காம்பீர் பதிலடி

காஷ்மீரில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் பதிவு செய்த அஃபரிடிக்கு இந்திய அணி வீரர் காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.