close
Choose your channels

கடற்கரையில் குட்டி வாக்… வைரலாகும் சூர்யா-ஜோதிகா புகைப்படம்!

Thursday, December 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம்வரும் நடிகர் சூர்யா- ஜோதிகா தம்பதிகள் இருவரும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா- ஜோதிகா இருவரும் கடற்கரையில் சாதாரணமாக நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாக அதை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் “ஜெய் பீம்“ திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக பெரிய வெற்றிப் பெற்ற இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் “எதற்கும் துணிந்தவன்“ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் பாலா இயக்கத்தில் மற்றொரு படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல நடிகை ஜோதிகாவும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் சசிகுமாருடன் இணைந்து “உடன்பிறப்பு“ திரைப்படத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. மேலும் தொடர்ந்து நடிகை ஜோதிகா கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா- ஜோதிகா இருவரும் கடற்கரையில் ஒன்றாக நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. “ஜெய் பீம்“ திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா- ஜோதிகா இருவரும் குழந்தைகளுடன் துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்தப் பயணத்தின்போது அவர்கள் ஒன்றாக கடற்கரையில் நடந்து சென்றிருக்கலாம் என்றும் அந்தப் புகைப்படம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது என்றும் ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.