காதல் மன்னன் கேரக்டரை மிஸ் செய்த சூர்யா

  • IndiaGlitz, [Sunday,April 02 2017]

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் கேரக்டரில் பிரபல நடிகர் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த கேரக்டரில் சூர்யா நடிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதுகுறித்து சூர்யா தரப்பினர் கூறியபோது, 'மகாநதி' படத்தில் ஜெமினி கணேசன்' கேரக்டரில் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். ஆனால் தற்போது ஒருசில காரணங்களால் அது நடைமுறை ஆகவில்லை' என்று கூறினர். இதனால் காதல் மன்னன் கேரக்டரை சூர்யா மிஸ் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படக்குழுவினர் ஜெமினி கணேசன் கேரக்டருக்கு வேறு பொருத்தமான நடிகரை தேடி வருகின்றனர்.

சாவித்ரி கேரக்டரில் நடிகை கீர்த்திசுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் சமந்தா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். நாக் அஸ்வின் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.

More News

இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். வெற்றி பெறுவது யார்?

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன் தொடங்கியுள்ளது.

ஏப்ரல்-1: இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள்

ஏப்ரல்-1. இந்த தேதியை கேட்டால் அனைவருக்கும் முட்டாள்கள் தினம்தான் ஞாபகம் வரும். ஆனால் இந்த வருடம் ஏப்ரல் 1, மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது

தனுஷ் மற்றும் சவுந்தர்யாவுக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கடந்த சில மாதங்களாக 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது

தெலுங்கு படத்தில் வில்லனாகும் பிரபல தமிழ் ஹீரோ

பாலிவுட் நாயகர்கள் அக்சயகுமார், விவேக் ஓபராய் ஆகியோர்கள் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் ஹீரோ ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தளபதி 61: அசர வைக்கும் லொகேஷனில் அடுத்தகட்ட படப்பிடிப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரண்டு கட்டமாக முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது