கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன். சூர்யா

  • IndiaGlitz, [Friday,April 07 2017]

பழம்பெரும் திரைப்பட இயக்குனர்களான கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏவிஎம் குமரன், சிவகுமார், சூர்யா, குட்டி பத்மினி, குகநாதன், விக்ரமன், கே.பாக்யராஜ், மகேந்திரன், பி.வாசு, சசி, எம்.என்.ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர்களின் மடியில் விளையாடிய மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது:

உலகில் உள்ள சினிமா படம் எடுக்கும் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போது நான் என்ன செய்தேன்? என்ற கேள்விதான் என்னுள் எழுகிறது. அதுமட்டுமின்றி, கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர்களை போலவே அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும், நல்ல மனிதராக இருக்க வேண்டும் போன்ற சமுதாயத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

எம்.ஜி.ஆர் நடித்த முதல் படமான 'சதிலீலாவதி' படம் தான் கிருஷ்ணன் பஞ்சு இணைந்து பணிபுரிந்த முதல் படம். அதே போல் சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான 'பராசக்தி' படத்தை இயக்கியது இதே இரட்டையர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தல' பிறந்த நாளில் ரிலீஸ் ஆகும் அஜித்-ஷாலினி படம்

தல அஜித் பிறந்த நாள் வரும் மே 1ஆம் தேதி வரவுள்ள நிலையில் இந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் முன்னேற்பாடு செய்து வருகின்றனர். இப்பொழுது முதலே கவுண்ட்-டவுனை ஆரம்பித்துவிட்ட ரசிகர்கள் பல சமூக சேவைகள் மூலம் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர்...

அதிரடி ஆக்சன் காட்சிகளில் மீண்டும் த்ரிஷா

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தில் கமல்ஹாசனுடன் ஸ்டண்ட் காட்சி உள்பட அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்த த்ரிஷா, தற்போது 'கர்ஜனை' என்ற படத்திலும் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார்...

டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்த அடுத்த நாள் சரத்குமார் வீட்டில் ரெய்டு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தில் உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்...

ரசிகர்கள் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்! விஷால் முக்கிய அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பதவியேற்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஷால் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவுவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது...

தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கடிதம்

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் 'நம்ம அணி[' கிட்டத்தட்ட அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் புதிய நிர்வாகிகளின் பதிவேற்பு விழா நேற்று மாலை சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது....