தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு சூர்யா அறிவித்த சூப்பர் செய்தி!

  • IndiaGlitz, [Saturday,February 12 2022]

பிரபல நடிகர் சூர்யாவுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவரது திரைப் படம் ரிலீஸ் ஆகும்போது தெலுங்கு மாநிலங்களிலும் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சூர்யா நடித்து முடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தியாக சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் தெலுங்கு பதிப்பில் தனது சொந்த குரலில் டப்பிங் செய்து உள்ளார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் டப்பிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்துள்ளது. இந்த தகவல் சூர்யாவின் தெலுங்கு ரசிகர்களுக்கான சூப்பர் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

More News

'வலிமை' படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவித்த தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் குறிப்பாக பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள 'வலிமை' படக்குழுவினர்களுக்கும்  தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தி

திடீரென நிறுத்தப்பட்ட ஐபிஎல் ஏலம்… என்ன காரணம்?

பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் 15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருகிறது.

'மஹான்' படத்தின் வாணிபோஜன் கேரக்டர் என்ன ஆச்சு? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

விக்ரம் நடித்த 'மஹான்' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் இந்த படத்தின் வெற்றியால் படக்குழுவினர் மிகுந்த

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அஸ்வின்… ஏலத்தில் சரிந்த சோகம்!

தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை பல அணிகள் போட்டி போட்டி ஏலத்தில் எடுக்கும் எனக் கருதப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அ

ஸ்காட்லாந்தில் நிலம் வாங்கிய தமிழ் சினிமா பிரபலம்… வாழ்த்தும் ரசிகர்கள்!

மாநாடு திரைப்படத்தின் எடிட்டர் பிரவீன் கேல்.எல் சமீபத்தில் ஸ்காட்லாந்தில்