சி3 திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்த 8 பேர். காவல்துறை அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி3' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை ரிலீஸ் தினத்தன்றே ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக இணையதளம் ஒன்று சவால் விட்டது.

இதனை தடுக்கும் வகையில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் ஏற்பாட்டின் பேரில் தமிழகமெங்கும் சி3 திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் தலா 4 பேர் கொண்ட குழு தீவிர
கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் திருச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் 'சி3' படத்தை சட்டவிரோதமாக செல்போனில் சிலர் பதிவு செய்வதாக வந்த தகவலை அடுத்து விஷால் ஏற்பாடு செய்த அதிரடி கண்காணிப்பு குழுவினர் 8 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருச்சி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

தனுஷின் ஹாலிவுட் படத்தில் ஆஸ்கார் விருது நடிகை

தனுஷ் நடிக்கவுள்ள ஹாலிவுட் படம் ' The Extraordinary Journey Of The Fakir' என்பதும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதும் ஏற்கனவே அறிந்ததே...

அதிமுகவை காப்பாற்ற அதிரடி முடிவை எடுப்பேன். பிரபல நடிகை

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் அவருடன் பல படங்கள் நடித்த பிரபல நடிகை லதா, ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவின் விசுவாசி. கட்சியில் நேரடியாக பணிபுரியவில்லை எனினும் அவ்வப்போது அதிமுகவுக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்...

சிவாஜி பேரனின் 2வது படத்தில் விஷ்ணு-மஞ்சுமா மோகன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பேரனும் ராம்குமார் மகனுமான துஷ்யந்த் தயாரித்த 'மீன்குழம்பும் மண்பானையும்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகிய நிலையில் தற்போது அவர் தனது இரண்டாவது தயாரிப்பை தொடங்கவுள்ளார்...

அதிமுக பெண் எம்.எல்.ஏ திடீர் மாயம். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

ஓபிஎஸ், சசிகலா யாரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தாலும் அவர் கண்டிப்பாக சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய கட்டாய நிலை தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளது.

சசிகலா ஆதரவு அமைச்சருக்கு அரவிந்தசாமியின் பதிலடி

தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற அசாதாரண சூழ்நிலை இருக்கும் நிலையில் எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம், நையாண்டியுடன் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.