close
Choose your channels

உருமாறிய கொரோனாவால் சென்னைக்கும் பாதிப்பா??? சுகாதாரத்துறை விளக்கம்!!!

Thursday, December 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உருமாறிய கொரோனாவால் சென்னைக்கும் பாதிப்பா??? சுகாதாரத்துறை விளக்கம்!!!

 

டிசம்பர் 21 ஆம் தேதி பிரிட்டனில் இருந்து சென்னைக்கு திரும்பிய ஒரு மாணவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரிட்டனில் புதிதாகப் பரவிவரும் அதிவேக கொரோனா வைரஸ் பாதிப்பு இவரைத் தாக்கி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவரின் ரத்த மாதிரிகள் அடுத்தக்கட்ட ஆய்விற்காக பூனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது எனத் தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருந்தது.

அந்த ரத்த மாதிரிகளின் முடிவு வரும் திங்கள் கிழமைதான் தெரியவரும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் பிரிட்டனில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தமிழகச் சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் காஞ்சிபுரம் தாலுகாவை சேர்ந்த அந்த 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நவம்பர் மாதத்தில் பிரிட்டனில் இருந்து 328 பேர் தமிழகத்திற்கு வந்ததாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர் என்றும் தமிழகச் சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதற்கு பின்புதான் பயணத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர். இப்படி இருந்தும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 800 பேர் பிரிட்டனில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்களும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்ற கோணத்தில் தமிழகச் சுகாதாரத்துறை அவர்களின் ரத்தமாதிரிகளை சேகரித்து உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.