'சூர்யா 39' படத்தின் சூப்பர் டைட்டில் மற்றும் அட்டகாசமான போஸ்டர்!

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி மேல் இன்ப அதிர்ச்சியாக அவரது படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக நேற்று அவர் நடித்து வந்த 40வது திரைப்படத்தின் டைட்டில் ’எதற்கும் துணிந்தவன்’ என்று அறிவிக்கப்பட்டது என்பதும் அதனை அடுத்து நள்ளிரவில் அந்த படத்தின் இரண்டாவது லுக் மற்றும் இன்று அந்த படத்தின் மூன்றாவது லுக் வெளி வந்தது என்பதும் தெரிந்ததே.

அடுத்தடுத்து சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் போஸ்டர்கள் வெளிவந்தது சூர்யா ரசிகர்களை இன்ப அதிர்ச்சி ஆக்கி கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் நடித்துக்கொண்டிருக்கும் 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன் ’சூர்யா 39’ படத்தின் டைட்டில் ‘ஜெய் பீம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டகாசமான இந்த டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் தற்போது சூர்யா ரசிகர்களால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஞானவேல் என்பவர் இயக்கத்தில் சீன் ரோல்டன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

உயிருக்குப் போராடும் கணவர்… விந்தணுக்களை கேட்டு மனைவி நடத்திய பாசப்போராட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் கணவரின் விந்தணுக்களை சேகரித்து அதன் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு செய்றீங்களா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையுயர்வை அடுத்து மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.

ஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமா? 17வயது சிறுமியை அடித்தே கொன்ற கொடூரத் தாத்தா!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 17 வயது சிறுமியை ஜீன்ஸ் அணிந்த குற்றத்திற்காக குடும்ப உறுப்பினர்களே

விஜயபாஸ்கரிடம் சிக்கிய ஆவணங்கள்...! வங்கி லாக்கரில் சோதனை செய்ய திட்டம்....!

விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

4 வருடங்கள் கழித்து பிரியாமணி திருமணத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

பாரதிராஜா இயக்கிய 'கண்களால் கைது செய்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 'பருத்திவீரன்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி.