பிரபல இயக்குனரின் அடுத்த படத்தின் நாயகியானார் 'சூர்யா 41' நடிகை!

சூர்யா நடிப்பில், பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தில் நடித்து வரும் நடிகை, பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நாயகியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் ’சூர்யா 41’ படத்தின் நாயகியாக நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி என்பது அனைவரும் அறிந்ததே. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள இவர் தற்போது தமிழில் ’சூர்யா 41’ படத்தின் மூலம் கால் பதித்துள்ளார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகவிருக்கும் தமிழ், தெலுங்கு திரைப்படத்திலும் கீர்த்தி ஷெட்டி தான் நாயகி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கீர்த்தி ஷெட்டிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த தெலுங்கு திரைப்படமான 'உப்பென்னா’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற கீர்த்தி ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

’மாநாடு’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் நேற்று ஒரு பாடல் பதிவும் விட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

200 கோடி பட்ஜெட் படத்தின் டிரைலர் ரிலீஸ்: காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் கலக்கிய நடிகை!

ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் தயாரான தமிழ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அந்த படத்தின் நாயகி காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் வந்து கலக்கிய புகைப்படம் மற்றும்

10 ஆண்டுகளில் செய்யாததை நேற்றைய பிறந்த நாளில் செய்த தளபதி விஜய்!

விஜய் தனது பிறந்தநாளின் போது 10 ஆண்டுகளில் செய்யாததை நேற்றைய பிறந்தநாளின்போது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 

பிறந்த நாளில் விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்!

தளபதி விஜய் நேற்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும், நேற்றைய பிறந்தநாள் மிகச் சிறப்பாக

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' பர்ஸ்ட் சிங்கிள்: செம வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

தனுஷ் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள்

பா ரஞ்சித்தின் அடுத்த படம் 3D-யில் உருவாகிறதா? செம அப்டேட்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.