close
Choose your channels

விமானத்தில் படமாக்கப்பட்ட பயங்கர ஸ்டண்ட் காட்சி.. 'சூர்யா 42' படத்தின் மாஸ் தகவல்..!

Monday, February 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக பிரம்மாண்டமான விமானம் செட் ஒன்று போடப்பட்டுள்ளதாகவும் அதில் அதிரடி ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜிம்மில் ஒரு சண்டை காட்சி எடுக்கப்பட்டதாகவும் சூர்யாவுடன் சுமார் 50 ஸ்டன்ட் கலைஞர்கள் மோதும் காட்சியை சுப்ரீம் சுந்தர் இயக்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. மொத்தத்தில் ‘சூர்யா 42’ படம் ஆக்சன் பிரியர்களுக்கு ஒரு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெகு விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் அடுத்தடுத்து ‘சூர்யா 42’ படத்தின் அப்டேட்டுகள் வரும் என்றும் கூறப்படுகிறது

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படம் தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் உருவாகி வருகிறது. வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் ஆன பின்னர் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.