close
Choose your channels

'சூர்யா 42' படத்தின் சூப்பர் தகவல்.. ரசிகர்களுக்கு செம விருந்து!

Friday, January 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சூர்யாவுடன், திஷா பதானி, யோகிபாபு, ரெடிங் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு பெரும்பாலும் இரவில்தான் நடந்து வருகிறது என்றும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த ஸ்டண்ட் காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் இயக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

சூர்யா மற்றும் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் பங்குபெறும் ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் தமிழ் சினிமாவில் பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் முழுவதுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவில் சூர்யா 13 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பதும் சூர்யாவுக்கு இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் ஆன பின்னர் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.