close
Choose your channels

'சூர்யா 42' படம் குறித்த வதந்தி.. விளக்கமளித்த தயாரிப்பாளர்!

Wednesday, February 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என்பதும் இதுவரை இல்லாத அளவில் 13 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே.

தற்போது வரலாற்று சம்பவங்கள் குறித்த காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த காட்சிகளுக்காக பிரம்மாண்டமாக செட்அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துவரும் நிலையில் ’சீதாராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாக்குர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும்,அவர் பிளாஷ்பேக் வரலாற்று சம்பந்தமான காட்சிகளில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் அளித்த போது ’சூர்யா 42’ படத்தில் மிருணாள் தாக்குர் நடிப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து ’சூர்யா 42’ படத்தில் மிருணாள் தாக்குர் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.