close
Choose your channels

அபிஷேகபச்சனின் அழைப்பை ஏற்று கொண்ட சூர்யா

Monday, March 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவே மகிழ்ச்சிக்கடலில் மூழ்கி இருக்கின்றது. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சென்னையின் எப்சி கால்பந்து அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்ததாக தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையின் எப்சி அணியின் உரிமையாளரும் பிரபல பாலிவுட் நடிகருமான அபிஷேக்பச்சன், தனது அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் மைதானத்தில் தனது அணியின் கொடியை பிடித்து அசைத்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த வெற்றி குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனது மகிழ்ச்சியை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் அபிஷேக்பச்சனுக்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துக்களை அதே டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து பதிலளித்த அபிஷேக், அடுத்தமுறை ஐஎஸ்.எல் போட்டி நடைபெறும்போது நீங்களும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். அபிஷேக்கின் அழைப்பை ஏற்றுக்கொண்டு உடனடியாக பதிலளித்த சூர்யா, 'கண்டிப்பாக வருகிறேன்' என்று கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.