close
Choose your channels

மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் இணையும் சூர்யா-ஆர்யா?

Saturday, September 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா மற்றும் ஆர்யா நடிப்பில் இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கிய ’காப்பான்’ திரைப்படம் நேற்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் சூர்யாவும் ஆர்யாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ’வர்மா’ என்ற திரைப்படத்தை அப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட மறுத்ததை அடுத்து, தற்போது இயக்குனர் பாலா அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். இந்த படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் நாயகர்கள் வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சூர்யாவும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் ‘நான் கடவுள்’ என்ற படத்தில் ஆர்யாவும், ‘பிதாமகன்’ மற்றும் ‘நந்தா’ ஆகிய படங்களில் சூர்யாவும் தனித்தனியே நடித்தாலும் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளனர்

நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கி வரும் ’சூரரைப்போற்று’ படத்தில் பிஸியாக இருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் வரும் ஜனவரியில் பாலாவின் படத்தில் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது 16 வருடங்கள் கழித்து மீண்டும் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதால் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.