close
Choose your channels

'வணங்கான்' படப்பிடிப்பு மீண்டும் தொடங்க யோகிபாபு காரணமா?

Thursday, November 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த ’வணங்கான்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று அதன் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது யோகிபாபுவால் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. அதன் பின்னர் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் சூர்யாவுடன் யோகிபாபு நடிக்க வேண்டிய நிலை இருப்பதால் யோகிபாபுவின் கால்ஷீட்டுக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர். ஆனால் யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ உள்பட பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால் கால்ஷீட் தர காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கேப்பில் ‘வணங்கான்’ படத்தை முடித்துவிடலாம் என பாலா கூறியதாகவும் அதற்கு சூர்யாவும் ஒப்பு கொண்டதாகவும், இதனையடுத்து ’வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.