close
Choose your channels

ரோப் கயிற்றில் தொங்கும் த்ரில் அனுபவம்: சூர்யா-ஜோதிகாவின் சுற்றுலா வீடியோ

Friday, June 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா தனது குடும்பத்துடன் தற்போது கோஸ்டாரிகாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா தங்களது குழந்தைகளுடன் கோஸ்டாரிகாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள அருவியில் குளிப்பது, ரோப் கயிற்றில் தொங்கிக் கொண்டு த்ரில் பயணம் செய்வது போன்ற பல்வேறு விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் ஜோதிகா பதிவு செய்துள்ளார்.

மேலும் சூர்யா - ஜோதிகா ஆகிய இருவரும் ரப்பர் படகுகளை ஓட்டிக்கொண்டு சுற்றுலாவை தங்களுடைய மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளனர். பொதுவாக மாஸ் நடிகர்கள் தங்களது குடும்ப சுற்றுலா புகைப்படங்களை வெளியிடுவதில்லை. ஆனால் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

இந்நிலையில் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்திலும் அதனை அடுத்து ’ஜெய்பீம்’ ஞானவேல், சிறுத்தை சிவா உள்ளிட்டோர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.