மும்பை ரெஸ்டாரெண்டில் சூர்யா-ஜோதிகா: வைரலாகும் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,August 10 2022]

மும்பை ரெஸ்டாரன்ட் ஒன்றில் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அதனை அடுத்து அவர் சிறுத்தை சிவா, ஞானசேகர், சுதா கொங்கரா ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பை நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு பான் - இந்தியா திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றது. இதற்காக அவர் தனது மனைவியுடன் மும்பை சென்றதாகவும் இந்த படம் குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் சூர்யா மற்றும் ஜோதிகா இருந்ததை அடுத்து அங்குள்ளவர்கள் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

More News

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிவகார்த்திகேயன் மகள்: என்ன செய்தார் தெரியுமா?

 கடந்த மாதம் 28ஆம்  தேதி முதல் சென்னையில் நடைபெற்ற 48வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து நேற்று பிரம்மாண்டமாக நிறைவு விழா நடைபெற்றது.

ஹீரோவாக ஜெயித்த ஜெய்: ரசிகர்களின் மாபெரும் வரவேற்பில் 'எண்ணித்துணிக'!

ஜெய் நடித்த 'எண்ணித்துணிக' திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

நடிகை அமலா நடித்த 'கணம்' ரிலீஸ் தேதி: ட்ரீம் வாரியர் நிறுவனம் அறிவிப்பு

வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

எனக்கு எதிராக சிலர் கடுமையாக உழைத்தார்கள்: நடிகை அமலாபால்

நடிகை அமலாபால் நடித்து தயாரித்த 'கடாவர்' என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

'யானை' இந்தியில் எடுத்தால் இவர்தான் ஹீரோயின்: அருண்விஜய்

அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான 'யானை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. அருண்விஜய் மற்றும் ஹரி ஆகிய இருவருக்குமே