சூர்யா-ஜோதிகா தவறாமல் பார்க்கும் பிரபல நடிகரின் திரைப்படங்கள்

  • IndiaGlitz, [Friday,May 29 2020]

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா, ஜோதிகா, ஒரு பிரபல நடிகரின் திரைப்படங்கள் அனைத்தையும் தவறாமல் பார்த்து விடுவோம் என்று கூறி உள்ளனர்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள நிலையில் நேற்று இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியபோது ’பிரபல பாலிவுட் நடிகரான ஆயுஷ்மான் குரானா நடித்த படங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்து விடுவோம் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தனர். ஆயுஷ்மான் குரானா நடிக்கும் படங்கள் அனைத்தும் சிறப்பான கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்றும் எனவே அவர் நடிக்கும் படங்கள் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறி உள்ளனர்

ஆயுஷ்மான் குரானா நடித்த ‘விக்கி டோனார்’என்ற திரைப்படம் தமிழில் ’தாராள பிரபு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அவர் நடித்த இன்னொரு திரைப்படமான ’அந்தாதூன்’ என்ற படமும் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்பதும் பிரசாந்த் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தன்னுடைய படங்கள் அனைத்தையும் தவறாமல் பார்ப்பேன் என்று கூறிய சூர்யா ஜோதிகா ஆகியோர்களின் அன்புக்கு மிக்க நன்றி என தனது சமூக வலை பக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்தவருக்கு கொரோனா! தனிமைப்படுத்தப்பட்ட போலீசார்

சேலத்தில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததோடு, அவர்களை பாலியல் தொழிலுக்கும் கட்டாயப்படுத்தியதாக மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா

ஒரு மனிதனை நரபலி கொடுத்தால் கொரோனா கட்டுப்பாடுக்குள் வரும்!!! கோவில் பூசாரியின் விபரீத முடிவு!!!

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தைச் சார்ந்த பூந்தவஹீதா என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேவி கோயில் பிராமணதேவி கோவில் என அழைக்கப் படுகிறது.

கொரோனா பிரச்சனையால் 112 செய்தித்தாள் நிறுவனங்களை நிறுத்தப் போகும் தொழிலதிபர்!!! திடுக்கிடும் தகவல்!!!

ஆஸ்திரேலியாவில் செய்தித்தாள் நிறுவனங்களை கிளைப்பரப்பி இருக்கும் ஒரு பெரிய நிறுவனம்தான் The Garp Australia.

திநகர் ரெங்கநாதன் தெரு 150 கடைகளை மூட உத்தரவு: சென்னை மாநகராட்சி அதிரடி

கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காம்ப்ளக்ஸ் கடைகள் தவிர தனிக் கடைகள் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது.

தந்தை உயிரை காப்பாற்ற கல்லீரல் தானம் கொடுத்த 25 வயது இளம் இயக்குனர்

மலையாள திரையுலகில் 23 வயதில் இயக்குனராகி தற்போது முன்னணி இயக்குனர் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆதின் ஒல்லூர் என்பவர் தனது தந்தைக்கு கல்லீரல் தானம் கொடுத்து