close
Choose your channels

கணவரின் பிறந்த நாளில் மகிழ்ச்சியான விஷயத்தை கூறிய சூர்யா-கார்த்தி நாயகி!

Monday, April 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நடித்த நடிகை தனது கணவரின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தியை கூறியுள்ளார் .

சூர்யா நடித்த ’மாஸ்’ மற்றும் கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் கன்னடம் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த ஆண்டு கடந்த மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இந்த நிலையில் நடிகை ப்ரணிதா நேற்று தனது கணவரின் பிறந்த 34வது பிறந்தநாளை அடுத்து ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை கூறியுள்ளார். அதில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் தங்கள் வீட்டில் ஒரு தேவதையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.