close
Choose your channels

குளு குளு இடத்தில் 'எதற்கும் துணிந்தவன்' இறுதிக்கட்ட படப்பிடிப்பு! ஃபர்ஸ்ட்சிங்கிள் எப்போது?

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் சென்னையில் நடைபெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குளு குளு குற்றாலத்தில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் குற்றாலத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படப்பிடிப்பில் சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் அனேகமாக கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.