close
Choose your channels

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதை பெரும் சூர்யா, உதயநிதி ஸ்டாலின்!

Thursday, January 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் உலகளாவிய சமுதாய ஆஸ்கார் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித சமூகங்களை வலுப்படுத்தும் வகையில் உரிய பங்களிப்புகளை தருபவர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கார் விருது கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கான நபர்களை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.

அதில் ’ஜெய்பீம்’ பட தயாரிப்பாளர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு உலகளாவிய ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மற்றும் ’ஜெய்பீம்’ படக்குழுவினர் நேரடியாக வந்து இந்த விருதை பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2021 ஆம் ஆண்டில் சர்வதேச வளரும் நட்சத்திரம் என்ற பிரிவில் நடிகரும், தயாரிப்பாளரும், திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளது. வளர்ந்துவரும் தலைவராக தனது பணியை சிறப்பாக செய்துவரும் நோக்கத்திற்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது இலினோய்ஸ் மாகாணத்திலுள்ள நேபர்வில்லே என்ற பகுதியில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.