ரசிகர்களை பார்க்க தியேட்டருக்கு வருவேன்: சூர்யா

  • IndiaGlitz, [Monday,May 20 2019]

மே 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 'என்.ஜி.கே' படத்தின் முதல் நாள் முதல் காட்சியன்று ரசிகர்களை திரையரங்கில் சந்திப்பேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 5 மணி முதல் 5.30 வரை நேரலையாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது என்.ஜி.கே முதல் நாள் முதல் காட்சி அன்று திரையரங்கிற்கு வருவீர்களா? எந்த தியேட்டருக்கு வருவீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, 'கண்டிப்பாக ரசிகர்களை சந்திக்க முதல் நாள் முதல் காட்சி அன்று திரையரங்கிற்கு வருவேன். ஆனால் எந்த தியேட்டர் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார்.

மேலும் இதுவரை நடித்த கேரக்டர்களில் சவாலான கேரக்டர் எது? என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, 'இனிமேல் நான் நடிக்க போகும் கேரக்டர் தான்' என்று பதிலளித்தார். எப்போதுமே நான் முடிந்து போனதை திரும்பி பார்ப்பதில்லை. இனிவரும் கேரக்டர்களில் எப்படி வித்தியாசமாக நடிக்கலாம் என்பதில்தான் கவனம் செலுத்துவேன்' என்று கூறினார்

மேலும் 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்றும், அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்றும் அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து ரசிக்கவும் என்றும் இறுதியில் சூர்யா கேட்டுக்கொண்டார்

More News

சீயான் விக்ரமின் அடுத்த படம் குறித்த அதிரடி தகவல்

சீயான் விக்ரம் நடித்து முடித்துள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அவர் தற்போது 'துருவ நட்சத்திரம்' மற்றும் மகாவீர் கர்ணா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சாயிஷா கர்ப்பமா? இந்த ஸ்மைலிக்கு என்ன அர்த்தம்?

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணமான நிலையில் சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'சாமி 2'. இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவின் புவனா கேரக்டரில் த்ரிஷாவே நடிக்க முதலில் ஒப்பந்தமாகியிருந்தார்.

விஜய்யின் 'மெர்சல்' பாணியில் சூர்யாவின் 'என்.ஜி.கே'

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவிருப்பதை

இயக்குனர் சிம்புதேவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

வடிவேல் நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' மற்றும் விஜய் நடித்த 'புலி' உள்பட ஒருசில படங்களை இயக்கிய சிம்புதேவன், இயக்குனர் வெங்கட்பிரபுவின் தயாரிப்பில்