close
Choose your channels

'எதற்கும் துணிந்தவன்' படம் பார்த்தவுடன் சூர்யா மகள் சொன்னது என்ன தெரியுமா?

Sunday, March 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூல் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு திருப்தியாக இருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த சூர்யா இந்த படத்தை பார்த்த தனது மகள் மற்றும் மகன் கூறிய கருத்து என்ன என்பது குறித்து கூறியுள்ளார். சூர்யாவின் முந்தைய படமான ‘ஜெய்பீம்’ மற்றும் ‘சூரரை போற்று’ படங்களுக்கு இணையாக ’எதற்கும் துணிந்தவன்’ இருந்ததாகவும் இந்த படத்தை பார்த்த தனது குழந்தைகள் கூறியதாகவும், இதற்கு முன்பு தான் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அதாவது கோபமான கதாபாத்திரத்தில் தான் நடிக்க வில்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக தனது மகள் திவ்யா இந்த படம் குறித்து என்னுடன் நீண்ட நேரம் உரையாடிய தாகவும் தனது மகன் தேவ், இந்தப்படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த படம் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றியை அடைந்துள்ளதால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த பேட்டியில் சூர்யா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.