close
Choose your channels

விஜய்யின் 'தங்கமான' பாணியை பின்பற்றிய சூர்யா!

Saturday, September 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தினத்தில் அந்தப் படத்தில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் தங்க நாணயம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக நடிகர் விஜய் இதனை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் அதே பாணியை கடைபிடித்துள்ளார். சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த ’சூரரைப் போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுக்கு வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த நடிகர்-நடிகைகள் உள்பட 150 பேர்களுக்கு எட்டு கிராம் அளவில் தங்க நாணயத்தை ஒவ்வொருவருக்கும் பரிசாக சூர்யா வழங்கியுள்ளார். விஜய், சூர்யாவை அடுத்து மற்ற மாஸ் நடிகர்களும் இதனை பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.