சூர்யா கொடுத்த ரூ.5 லட்சம் நிதியுதவி: தமிழக எம்பி தெரிவித்த நன்றி

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் முதல்கட்ட ஊரடங்கு அறிவித்தபின் பெப்சி தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட நிலையில் முதல் முதலாக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்தவர் நடிகர் சூர்யா தான் என்பது தெரிந்ததே. அதன் பின்னர்தான் பல நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ஆகியோர் பெப்சி தொழிலாளர்களுக்காக நிதியுதவி செய்தனர்.

அந்த வகையில் கஷ்டப்படும் ஏழைகளுக்காக முதல் நபராக உதவி செய்யும் நடிகர் சூர்யா தற்போது மேலும் ஒரு 5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்த செய்தி வெளியாகியுள்ளது. மதுரை எம்பி வெங்கடேசன் அவர்கள் ’அன்னவாசல்’ என்ற திட்டத்தை ஆரம்பித்து மதுரை மட்டுமின்றி பல பகுதிகளில் ஊரடங்கு நேரத்தில் பசியால் வாடும் பலருக்கு உணவுகளை அளித்து வருகிறார். அவருடைய இந்த திட்டத்திற்கு பலர் நிதியுதவி செய்து வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யா 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

இதுகுறித்து வெங்கடேசன் எம்பி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்த சூர்யாவுக்கு நன்றி. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த உதவிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அரசு அறிவித்த போதிலும் திரைப்படத்துறையினர்களுக்கு

கொரோனா நிதி சர்ச்சை: தளபதி விஜய்க்கு ஆதரவு அளித்த சிம்பு தயாரிப்பாளர்!

தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் தனது ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு

நயன்தாரா பெற்ற முத்தத்திலேயே இதுதான் பெஸ்ட்: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகிய .அய்யா. திரைப்படத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகமான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கடந்த 15 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில்

புலிட்சர் விருதைத் தட்டிச்செல்லும் 3 இந்திய புகைப்பட கலைஞர்கள்!!! சாதித்தது என்ன???

காஷ்மீரின் சிறப்பு அஸ்தஸ்து நீக்கப்பட்ட காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை படமெடுத்த  3 இந்திய புகைப்பட கலைஞர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது

குடும்ப பகை எதிரொலி: 10ஆம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி கொலை

விழுப்புரம் அருகே இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது