படப்பிடிப்பு முடிந்ததும் சூர்யா செய்யப்போகும் செயல்: கிராம மக்கள் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Tuesday,April 12 2022]

’சூர்யா 41’ படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படப்பிடிப்பு நடைபெறும் கிராம மக்களுக்கு சூர்யா செய்யப் போகும் செயல் அந்த பகுதி மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 41’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரி அருகே நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் சில காட்சிகள் நடுக்கடலில் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்திற்காக குமரி அருகே உள்ள கிராமம் ஒன்றில் மூன்று வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், நாளை முதல் இந்த வீடுகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ’சூர்யா 41’ படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த வீடுகளை அந்த பகுதியில் வீடில்லாமல் இருக்கும் மூன்று குடும்பத்தினர்களுக்கு இலவசமாக வழங்க நடிகர் சூர்யா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

பிக்பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜிக்கு கிடைத்தது இத்தனை லட்சமா?

கடந்த ஞாயிறன்று நடந்த பிக்பாஸ் அல்டிமேட் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டார் என்பதும், நிரூப் இரண்டாவது இடத்தையும்,

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': நாளை சென்னை, செங்கல்பட்டில் மட்டும் இத்தனை காட்சிகளா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதியில் மட்டும் 1200க்கும் மேற்பட்ட காட்சிகள் நாளை திரையிடப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும்

'பீஸ்ட்' படத்தின் ஆக்சன் சவுண்ட் எஃபெக்ட்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு தாய்லாந்து பீச்சில் ஆட்டம் போட்ட தமிழ் நடிகை!

விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு தமிழ் நடிகை ஒருவர் ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

கறுப்பு காஸ்டியூமில் தாய்மையைக் கொண்டாடும் பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாகவும்