'இது சட்டப்படி குற்றம்': 'ஜெய்பீம்' படம் குறித்து எச்சரிக்கை விடுத்த சூர்யா!

  • IndiaGlitz, [Tuesday,November 02 2021]

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திலிருந்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படத்தை ஒரு சில ஹோட்டல் உள்பட பொது இடங்களில் திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியானது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளியானது

இந்நிலையில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது ’ஜெய்பீம்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஓட்டல்கள், பேருந்துகள் உள்பட பொது இடங்களில் திரையிட தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சட்ட விரோத செயல்களுக்கு யாரும் உடந்தையாக இருக்கக் கூடாது என்று எச்சரிக்கை படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மீறி பொது இடத்தில் ’ஜெய்பீம்’ திரைப்படத்தை திரையிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது அன்பான ரசிகர்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என கேட்டு கொள்வதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

புனித் ராஜ்குமார் நினைவாக விஷால்-ஆர்யா செய்த பெருமைக்குரிய செயல்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென காலமானது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் அடுத்த கேப்டன் கே.எல்.ராகுல்… வெளியான பரபரப்பு தகவல்!

டி20 உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தவுடன் அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்போட்டியில் இந்திய

இந்தியா கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை அரைஇறுதிக்குள் நுழையுமா?

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியுடன் எந்தவித போராட்டமும்

'தேவர் மகன்' வசனத்தை கமல்ஹாசனுக்கு நன்றியாக கூறிய சூர்யா!

சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தை பார்த்து கமல்ஹாசன் இன்று பாராட்டு தெரிவித்த நிலையில் அவருக்கு அவருடைய வெற்றிப்படங்களில் ஒன்றான தேவர்மகன் படத்தின் வசனத்தை கூறி சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

10 ஆண்டு காதலரை பிரேக் அப் செய்துவிட்டாரா பிரியா பவானிசங்கர்?

நடிகை பிரியா பவானி சங்கர், ராஜவேல் என்பவரை பத்தாண்டு காலமாக காதலித்து வந்த நிலையில் திடீரென அவரது இன்ஸ்டாகிராம் பதிவால் அவரது காதல் முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.