close
Choose your channels

நள்ளிரவில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' செகண்ட்லுக்!

Friday, July 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து நேற்று மாலை அவர் நடித்துவரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் ’எதற்கும் துணிந்தவன்’ என்று அறிவிப்பு வெளியானது என்பதும் இதுகுறித்து வெளியான வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் செகண்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

கையில் ரத்தக்கறையுடன் உள்ள வாள் வைத்து ஆக்ரோஷமாக உட்கார்ந்து இருக்கும் சூர்யா முன்பு பிணக்குவியல் இருப்பது போல் இருக்கும் இந்த செகண்ட்லுக் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்திருக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார் என்பதும், டி இமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் இருப்பதால் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.