close
Choose your channels

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': செம அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

Wednesday, February 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களின் அப்டேட்டுக்கள் அவ்வப்போது வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களில் ஒன்றான சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் செம அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீஸர் பிப்ரவரி 18ஆம் தேதி அதாவது நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.